அது ஒரு வட்டாட்சியர்
அலுவலகம். வெகுநேரம் கையில் குழந்தையோடு காத்துக் கொண்டிருந்த அந்த கணவனும் மனைவியும்
கிராமத்துவாசிகள் என்பது அவர்களின் உடையிலல்ல, அவர்களின் முகத்தில் தெரிந்தது.
நகரவாசிகளுக்கு அந்த அப்பாவித்தனம் உரித்தானதல்ல. அல்லது நகரத்திற்க்கு உதவாது
என்று உரித்தெடுத்திருக்கலாம். முறையே 40 வயது 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவனும்
மனைவியும் உதவியாளர் அழைத்த குரலுக்கு சிறுபிள்ளை போல் ஓடிச்சென்றனர். உதவியாளர் இவர்களை அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றார்
சில கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி நிமிர்ந்து இவர்களை
பார்த்து “என்னையா... என்ன வேணும் ?”
என்றார்
கணவன் “ஐயா.. எங்களுக்கு
ரொம்ப வருஷங்கழிச்சு கும்பிடாத சாமியெல்லாம் கும்பிட்டு பிள்ளை
பிறந்திருக்குங்க்கையா" என்று பெருமிதத்துடன் சொன்னவர்... தொடர்ந்தார்
"என் பிள்ளைக்கு ஏதோ பிறப்பு சான்றிதழாங்கையா... ஆஸ்பத்திரில
இங்க வந்து வாங்கிக்க சொன்னாங்கையா” என்றார்