Friday, December 13, 2013

கண்ணீர்அஞ்சலி

கடந்த ஒரு வாரமாய்
தெருமுனையில்
காலை மதியம்
மாலை இரவு
இருபத்தி நான்கு மணிநேரமும்
சதா அழுதுகொண்டிருக்கிறது
அந்தக் கண்கள்

வயிறு இருக்கும் கண்கள் எல்லாம்
வற்றிப் போய்விட்டது
சுவற்றிலிருப்பதால் தான்
இன்னும் சிந்திக் கொண்டிருக்கிறதோ
அந்தக் காகிதக் கண்கள்


No comments:

Post a Comment